🎵 Lyrics
அப்பா மடியில் சாய்ந்து உறங்குவேன்
என் பாரங்களை எல்லாமே
தோளில் சுமத்துவேன் – உங்க (2)
ஆராதனை… ஆராதனை… ஆராதனை
1. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும்
நீர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை
காரிருள்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் – என்
கால்களுக்கு தீபமாக நீர் வருவீர்
2. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் பண்ணும்
உயர்ந்தவரும் சிறந்தவருமானவரே
சீயோனில் வாசம் பண்ணும் நாயகனே – உம்
சிறகினிலே என்னைக் கொஞ்சம் மூடிக்கொள்ளும்
3. அநித்யமான இந்த உலகம் அழிந்து போகும்
நித்யமான பரலோகம் நிலைத்து நிற்கும்
எப்போது நீர் இறங்கி வருவீரோ – உம்
வருகைக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்